சுயத்திற்கு மரித்தல்


1.   நீங்கள் மறக்கப்பட்டு,  அலசட்சியப்படுத்தி ஒதுக்கித் தள்ளிவிடப்படும் சமயங்களில்.................ஏற்பட்ட அவமானங்களுக்காகச் சற்றேனும் மனம் புண்படாமல்  "கிறிஸ்துவுக்காய் பாடுபட  நானும்  தகுதி பெற்றேனே! என்ற மகிழ்ச்சியில் மாத்திரம்  நீங்கள்  நிலைத்திருந்தால்,   அதுவே  சுயத்திற்கு  மரித்தல்!

2.  உங்கள்  நன்மை  தீமையாகப் பேசப்பட்டு,  உங்கள்  விருப்பங்கள் மறுக்கப்பட்டு,  உங்கள் கருத்துக்கள்  பகடி செய்யப்படும் சமயங்களில்..............உள்ளத்தில்  கோபப்படாமல்,  நியாயத்தைத் தட்டிக் கேட்க முயற்சிக்காமல்,   அன்பார்ந்த  மௌனத்தோடு  நீங்கள் பொறுமையாய்யிருந்தால்,  அதுவே  சுயத்திற்கு  மரித்தல்!

3.  எந்த ஒழுங்கின்மையையும்,  காலந்தாழ்த்தி  வருதலையும்,  வீண் விரயங்களையும், ஆவிக்குறிய  உணர்வற்ற செயல்களையும் .......... "இயேசுவைப் போலவே"  அன்பு கலந்த பொறுமையுடன்  சகித்துக்கொண்டால்,   அதுவே சுயத்திற்கு  மரித்தல்!

4.  என் பெயரைக் குறிப்பிடவேண்டும்....,  என் செயல்கள்  பேசப்படவேண்டும்.... போன்ற  விருப்பம்  துளிகூட  இல்லாமல்.............."அறியப்படாதவனாகவே" இருந்துவிட மெய்யான விருப்பத்தை  நீங்கள்  பெற்றிருந்தால்,  அதுவே சுயத்திற்கு  மரித்தல்!

5.  தேவசித்தத்தின்படியான  எவ்வித உணவானாலும்,  உடையானாலும், சீதோஷண  நிலையானாலும்,  சமுதாயமானாலும்,  தனிமையானாலும் அவைகளில் நீங்கள் மனநிறைவு கொண்டிருந்தால்,   அதுவே   சுயத்திற்கு  மரித்தல்!

6.  தேவை  மிகுந்த  இக்கட்டான  சூழ்நிலைகளில்  நீங்கள்  இருக்கும்போது உங்கள்  சகோதரனின்  தேவை சந்திக்கப்பட்டு  ஐசுவரியமடைவதைக் காணும்போது............. சிறிதேனும்  பொறாமை  உணர்வு  கொள்ளாமல், தேவனிடம் கேள்வி கேட்காமல் சகோதரனோடு சேர்ந்து உங்களால் களிகூர முடியும் என்றால்,  அதுவே சுயத்திற்கு  மரித்தல்!

7.  உங்களைவிட குறைவான  ஒருவரின் புத்திமதியையும், கடிந்துகொள்ளுதலையும்...............இருதயத்தில் எவ்வித எதிர்ப்பும்  கோபமும் கொள்ளாமல், அவைகளை உள்ளத்தில் மாத்திரமல்லாமல் வெளியரங்கமாயும் நீங்கள்  தாழ்மையுடன்  ஏற்றுக்கொள்ள முடியுமென்றால்,  அதுவே  சுயத்திற்கு  மரித்தல்!


"ஒருவன் என் பின்னே வர விரும்பினால் அவன் தன்னைத்தான்  வெறுத்து  தன் சிலுவையை  அனுதினமும் எடுத்துக்கொண்டு , என்னைப் பின்பற்றக்கடவன்.''    (லூக்கா   9-23)

எனது திருச்சபையா? தேவனுடைய ராஜ்யமா?


நாம் செல்கின்ற திருச்சபைக்காக நாம் ஊழியம் செய்யதான் வேண்டும்.

ஆனால் அதற்காக தேவனை விற்று நமது திருச்சபையை கட்டியெழுப்ப  முடியாது!!!

எனது உள்ளுர் திருச்சபை ஒரு பெரிய சபையாக மாற வேண்டும். ஒரு பெரிய நிறுவனமாக மாறவேண்டும் என்ற ஆசையை விட தேவன் எமக்கு தந்திருக்கும் சக விசுவாசிகளை சரியான சத்தியத்தின்மேல் கட்டியெழுப்ப வேண்டுமென்ற வாஞ்சை எம்மிடம் இருக்க வேண்டும்.

அது என்னிடம் உண்டா? (தேவன் எதை எதிர்பார்க்கிறார்?) - சிந்திப்போம்....!!!

தேவனுடைய ராஜ்யத்திற்குரியவைகளை சிந்திப்போம்....

நமக்கு சொந்தமான இவ்வுலக திருச்சபையை நேசிப்பதைக் காட்டிலும் தேவனை அதிகமாக நேசிப்போம்!

மெய்யான உலகலாவிய திருச்சபை இயேசு கிறிஸ்துவின் மணவாட்டி சபையாகும் !!!

எனது திருச்சபையா? தேவனுடைய ராஜ்யமா?

இயேசு கிறிஸ்து எதை எமக்கு தர விரும்புகின்றார் என்பதை சிந்திப்பீர்.

செயல்படுவீர்.

நித்திய வாழ்வு


தேவன் நித்திய வாழ்வை தந்துள்ளார். அவ்வுணர்வை கொண்டிருங்கள்!

 “தேவன் தமது குமாரனைக்குறித்துக் கொடுத்த சாட்சி இதுவே. தேவனுடைய குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் அந்தச் சாட்சியைத் தனக்குள்ளே கொண்டிருக்கிறான்” (1யோவான் 5:11).

 நித்திய வாழ்க்கையானது தேவனால் வாக்களிக்கப்பட்டதல்ல. அது முன்னோக்கிபார்த்து அவர் எமக்குள் வாழும் இனிய வாழ்வை பூரணப்படுத்துவதானது. அதாவது அவர் அதனை முற்றிலும் இலவசமாக தர ஆயத்தமாக இருக்கின்றார். வேதாகமம் கூறுகின்றது ‘பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்.’ (ரோமர் 6:23). இந்த வரமானது இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கின்ற அனைவருக்கும் இலவசமாகக் கொடுக்கப்படுகின்ற ஒன்றாகும். ‘தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்’ (யோவான் 3:16).

 நித்திய வாழ்வானது முடிவற்ற வாழ்வு என்று அர்த்தமல்ல. அது அதையும் தாண்டியது. உண்மையில் நித்திய வாழ்வானது தேவனுடைய இயற்கையான சுபாவத்தை கொண்ட வாழ்வாக இருக்கின்றது. அது சரியாக தேவன் வாழும் வாழ்வாக அப்படியே பிரதிபலிக்கின்றது. அவ்வாறான வாழ்வையே இயேசு இவ்வுலகத்திற்குள் கொண்டுவந்தார். அவர் ஜீவனை பூரணப்படுத்தவே இங்கு வந்தார். (யோவான் 10:10). தேவனால் மறுருபமாக்கப்பட்ட மகிமையான வாழ்வையே இயேசு கொண்டுவந்தார். நீங்கள் அவரை விசுவாசித்தால், உங்கள் ஆவிக்குள்ளாக அதையே நீங்கள் பெற்றுக்கொள்கின்றீர்கள்.

 தேவனிடத்திலிருந்து பெற்றுக்கொள்ளும் வாழ்வானது உங்கள் சரீரத்தில் உணரக்கூடியதல்ல. காரணம் நித்திய வாழ்வானது உங்கள் ஆவிக்குள்ளாக காணப்படுகின்றது. சரீரத்திற்குள் அல்ல. எனினும் அது சரீரத்தையும் தாக்கக்கூடியது. முதலில் உங்கள் சரீரத்தில் அதை உணராவிட்டாலும்கூட நீங்கள் நித்திய வாழ்வினை கொண்டுள்ளீர்கள். அது உங்கள் ஆவிக்குள்ளே காணப்படுகின்றது. ஆகவேதான் அப்போஸ்தலனாகிய யோவான் திருச்சபைக்கு எழுதும்போது, தன்னுடைய இவ்வுலக ஊழியத்தை முடித்துக்கொண்டு தேவனுடைய பிள்ளையாக நித்திய நிரந்தரமாக சதாகாலம் வாழ்வதைக் குறித்து எழுதுகின்றார். “தேவன் தமது குமாரனைக்குறித்துக் கொடுத்த சாட்சி இதுவே. தேவனுடைய குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் அந்தச் சாட்சியைத் தனக்குள்ளே கொண்டிருக்கிறான்” (1யோவான் 5:13).

 உங்கள் மனநிலையின் நபத்துவமானது, உங்கள் வாழ்வுமுறை சார்ந்த அடையாள உரிமையைப் பெற்றதாக இருக்கின்றது. அது நீங்கள் எடுக்கின்ற தீர்மானத்தில், உங்களுக்கு நேரிடுகின்ற காரியங்களில், உங்களைச் சுற்றிலும் செல்வாக்கைச் செலுத்துகின்றது. ஆகவேதான் நான் தேவனுடைய தெய்வீக வாழ்வை உங்களுக்குள் கொண்டிருங்கள் என்று வாதிடுகின்றேன். நீங்கள் நித்திய ஜீவனை பெற்றவர்களாக இருக்கவேண்டுமென்றே தேவன் வாஞ்சிக்கின்றார். ஆகவே நீங்கள் சாதாரணமானவர்கள் அல்ல. நீங்கள் யார் என்றும் உங்களிடம் என்ன இருக்கின்றது என்ன என்றும் நீங்கள் அறிந்துகொள்ள வேண்டுமென அவர் விரும்புகின்றார்.

 உங்களிடமுள்ள வாழ்வானது அற்புதமான வாழ்வாகும்! அது மாசடையக் கூடாதது. அது வியாதியினால், நோயினால், தோல்வியினால், மரணத்தினால், பிசாசினால் தாக்கப்பட்டு, மாசடையக் கூடாதது. நீங்கள் உணர்வுள்ளவர்களாக வாழும்போது உங்கள் வாழ்க்கையில் எதிர்மறையான சக்திகள் செல்வாக்கு செலுத்த முடியாது.

கர்த்தர் உங்களையும் பயன்படுத்தலாம்.

ஆண்டவர் உங்களைப் பயன்படுத்த முடியாது என்று உணரும்போது பின்வருவனவற்றை நினைத்துக்கொள்ளுங்கள் - நோவா குடித்து வெறித்தார், ஆபிரகாம் மிகவும் வயதானவர், ஈசாக்கு பகல்கனவு காண்பவர், யோசேப்பு துஷ்ப்பிரயோகம் செய்யப்பட்டவர், லேயாள் அவலட்சணமானவள், மோசே திக்குவாயன், கிதியோன் பயந்தவன், சிம்சோனுக்கு நீண்ட தலைமுடி இருந்ததுடன் பெண்கள் பலவீனம் கொண்டவன், ராகாப் ஒரு விபசாரி, எரேமியா சிறியவன், தாவீது தவறான உறவுக்குட்பட்டு கொலையும் செய்தவர். எலியா தற்கொலை எண்ணம் கொண்டிருந்தார். யோபு எல்லாவற்றையும் இழந்தார், பேதுரு கிறிஸ்துவை மறுதலித்தார், யோனா ஆண்டவரை விட்டு ஓடினார்;. நகோமி விதவை, சீஷர்கள் ஜெபிக்கும்போது தூங்கி விழுந்தனர்.. மார்த்தாள் எல்லாவற்றிலும் கவலை கொண்டாள், மகதலேனா மரியாளைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை, சமாரியப் பெண் ஒன்றுக்கு மேட்பட்ட தடவைகள் விவாகரத்து ஆனவள், சகேயு குள்ளன்” ஆண்டவர் நாம் என்ன பாவத்தில் வாழந்தாலும் எம்மை யன்படுத்திக் கொண்டேயிருப்பார் என்று நான் கூறவில்லை. உங்கள் பழைய வாழ்வை சாட்டாக வைத்து ஆண்டவர் காரியத்தை அலட்சியம் செய்ய வேண்டாம் என்கிறேன் நீங்கள் பல முறை விழுந்திருக்கலாம் ஆனால் உண்மையாக மனந்திரும்பி வாழ்க்கை சரிப்படுத்தி இருப்பீர்களானால் கர்த்தர் உங்களையும் பயன்படுத்தலாம். www.facebook.com/GoodNewsDailytamil

எதிர்காலத்திலும் வழிநடத்தும் கர்த்தர்.

ஒரு கணவர் தன் மனைவியிடம்,  'ஐயோ இந்த காலத்தில் மற்ற பிள்ளைகள் படிக்கிறதையும் வாங்குகிற மார்க்குகளையும் பார்த்தால் நம்ம பிள்ளைகள் எங்கே போய் நிற்பார்களோ தெரியவில்லை! பிற்காலத்தில் ஒரு நல்ல வேலை கிடைப்பது என்பது மிகவும் கஷ்டம் போலிருக்கிறது. ஒரு நல்ல வேலை கிடைக்காவிட்டால் இந்த பிள்ளைகள் என்ன செய்யும்?'என்று கவலைப்பட ஆரம்பித்தார். ஆனால் மனைவியோ, ' பாருங்கள் நம் பிள்ளைகளுக்கு தேவன் கொடுத்திருக்கிற அருமையான தாலந்துகளை! அவன் கிட்டாரை எடுத்து பாட ஆரம்பித்தால் எல்லாரும் நின்று கேட்டுவிட்டு தான் போவார்கள். நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்? கர்த்தருடைய கரத்தில் நம் பிள்ளைகளின் எதிர்காலம் இருப்பதால் அவர் பார்த்து கொள்வார்' என்று கூறினார்கள்.

இருவரும் கர்த்தரின் மேல் அன்புள்ளவர்கள்தான், அவர்மேல் நம்பிக்கை உள்ளவர்கள்தான். ஆனால் கவலை என்று வரும்போது, கர்த்தரைவிட பிரச்சனைகளும் போராட்டங்களுமே பெரிதாக தெரிகிறது. நாம் கவலைப்படும்போது, நம்முடைய எண்ணங்களும், நம்முடைய சிந்தனைகளும் கர்த்தரை நோக்கி பார்ப்பதை விட்டுவிட்டு, பிரச்சனைகளையே நோக்கி பார்க்க ஆரம்பிக்கிறது. பேதுரு கடலின் மேல் நடந்து கர்த்தரை நோக்கி பார்த்தபடியே நடக்க ஆரம்பித்த போது வெற்றிகரமாக நடக்க ஆரம்பித்தார். ஆனால் எப்போது கடலையும் அலைகளையும் பார்க்க ஆரம்பித்தாரோ கடலில் மூழ்க ஆரம்பித்தார்.

'ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும்; என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள் என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஆகாரத்தைப்பார்க்கிலும் ஜீவனும், உடையைப்பார்க்கிலும் சரீரமும் விசேஷித்தவைகள் அல்லவா?' என்று இயேசுகிறிஸ்து கூறினார். அவர் கவலைப்பட வேண்டாம் என்று சொல்லும்போது நாம் கவலைப்பட்டால் அவருடைய வார்த்தைக்கு கீழ்ப்படியாமற் போகும் பாவத்திற்கு உள்ளாகிறோம் அல்லவா?

தேவன் மேல் நம் நம்பிக்கை பூரணமாக இருந்தால் நிச்சயமாக நாம் எதைக் குறித்தும் கவலைப்பட மாட்டோம். கர்த்தருடைய கரத்தை மீறி எதுவும் நிச்சயமாக நம் வாழ்க்கையில் நடப்பதில்லை, நடக்க போவதும் இல்லை. ஆகையால் எதற்கு கவலைப்பட வேண்டும்? 'அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்' (1 பேதுரு 5:7) என்று வேதம் நமக்கு போதிக்கிறது.

ஆகையால் நம்முடைய கவலைகளை அவர் மேல் வைத்துவிட்டு நம்மை விசாரிக்கிற தேவனிடத்தில் நம்பிக்கையாக இருப்போமாக. அவர் அனைத்தையும் பார்த்து கொள்வார். ஏனெனில் அவரது பெயர் யெகோவாயீரே! எல்லாவற்றையும் பார்த்து கொள்கிற தேவன்! நம் தேவைகளை சந்திக்கிற தேவன்! நம் கவலைகளை அறிந்த தேவன்! நமக்காக அற்புதங்களை செய்கிறவர்! 

கர்த்தருடைய கரம் நம்மை வழிநடத்துகின்றபடியினால் நாம் இனியும் நம் எதிர்காலத்தைக் குறித்து கவலைப்படத் தேவையில்லை. அவரே நம்மை வழிநடத்துவார். ஆமென் அல்லேலூயா!

1பேதுரு 5:6 

ஆகையால், ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, 


அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள்.

நீங்கள் பெறுமதிமிக்கவர்கள்

நீங்கள் பெறுமதிமிக்கவர்கள்

ஒரு நிகழ்வின்போது ஒரு அருமையான பிரசங்கியார் ஒருவர், பார்வையாளர்களை நோக்கி 1000 ரூபாய் தாளை உயர்த்திப் பிடித்துக்காட்டி, 'யாருக்கு இது வேண்டும்? எனக்கேட்டார். 

அந்த அறையிலிருந்த அனைவரும் தம் கரங்களை உயர்த்திக் காட்டினார்கள். உடனே பிரசங்கியார் 'இந்த 1000 ரூபாவை உங்களில் ஒருவருக்குக் கொடுக்கப் போகிறேன். அதற்குமுன் ஒரு காரியத்தைச் செய்யப் போகிறேன் என்று சொல்லி. அந்த 1000 ரூபாய் தாளை தன் கைகளினால் கசக்கிப் பிழிந்தார்.

பின் மீண்டும் பார்வையாளர்களை நோக்கி 'இது யாருக்கு வேண்டும்? எனக் கேட்டார். 
மறுபடியும் கைகள் உயர்ந்தன. உடனே அவர் அந்த 1000 ரூபாய் தாளை நிலத்தில் போட்டு,
தன் காலால் மிதித்தார். 

மீண்டும் பார்வையாளர்களை நோக்கி 'கால்களால் மிதிக்கப்பட்ட இந்த அழுக்கான தாள் யாருக்கு வேண்டும்? எனக் கேட்டார். 
மீண்டுமாக அனைவரும் தங்கள் கைகளை உயர்த்திக் காட்டினார்கள். 

உடனே அவர் அவர்களை நோக்கி 'பார்த்தீர்களா! இதிலிருந்து நாம் அருமையானதொரு பாடத்தைக் கற்றுக்கொள்கிறோம். இந்த 1000 ரூபாய் தாளுக்கு நான் என்ன செய்தாலும் அதைக் குறித்து நீங்கள் பொருட்படுத்தவே இல்லை. அதனை நீங்கள் பெற்றுக்கொள்ளவே விரும்பினீர்கள். ஏனெனில் அது தனது பெறுமதியை இழந்து போகவேயில்லை. அதுபோலவே நமது வாழ்வும். பலவேளைகளில் சந்தர்ப்ப சூழ்நிலை களினாலும், நமது தவறான தீர்மானங்களினாலும், மற்றவர்களாலும் வீழ்த்தப்படுகிறோம். கசக்கப்படுகிறோம், காயப்படுகிறோம், மிதிக்கப்படுகிறோம், சேறு பூசப்படுகிறோம். அப்படிப்பட்ட நேரங்களில் நாம் நம்மைக் குறித்து பெறுமதியற்றவர்களாக எண்ணி உடைந்து விடுகின்றோம். ஆனால் நமது வாழ்வில் என்ன நிகழ்ந்திருந்தாலும், இனிமேல் என்ன நிகழ்ந்தாலும் நீங்கள் உங்கள் பெறுமதியை இழப்பதில்லை. நாம் எந்த நிலையில் இருந்தாலும் நம்மை படைத்த நம்முடைய ஆண்டவருக்கு நாம் பெறுமதி வாய்ந்தவர்கள். “

“நமது வாழ்வின் பெறுமதியானது, நாம் என்ன சாதித்திருக்கிறோம், நமக்கு என்னத் தெரியும் என்பதில் அல்ல, நம்மில் நாமே பெறுமதி உள்ளவர்களாய் இருக்கிறோம்" என்றார்.

சிந்தனைக்கு: 

உங்கள் பரம பிதாவுக்கு '..நீங்கள் விசேஷித்தவர்கள்" (மத்.6:26). 

'நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்" (ரோமர்.5:8).

வைரம்

மனுஷரால் தள்ளப்பட்டதாயினும், தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டதும் விலைலேயறப் பெற்றதுமாயிருக்கிற ஜீவனுள்ள கல்லாகிய அவரிடத்தில் சேர்ந்தவர்களாகிய நீங்களும், ஜீவனுள்ள கற்களைப்போல ஆவிக்கேற்ற மாளிகையாகவும்,இயேசுகிறிஸ்து மூலமாய்த் தேவனுக்குப் பிரியமான ஆவிக்கேற்ற பலிகளைச் செலுத்தும்படிக்குப் பரிசுத்த ஆசாரியக் கூட்டமாகவும் கட்டப்பட்டு வருகிறீர்கள். - (1பேதுரு2:5).

விலையுயர்ந்த கற்கள் எப்போதும் மதிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு
வைக்கப்படும். அதனை அடைவதற்காக யுத்தங்களும் புராதன காலங்களிலே நடந்ததுண்டு. ஒருசில மன்னர்கள் தங்கள் மனைவிக்கு வைரத்தினாலான மோதிரங்களை அன்பின் பரிசாக அளித்ததுமுண்டு. எவ்வாறாயினும் வைரம் எப்போதுமே மதிப்பு மிக்கதே.

தேவன் கிறிஸ்துவையும், நம்மையும் விலையேறப்பெற்ற ஜீவனுள்ள கல்லாகவே காண்கிறார். தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டதும் விலையேறப் பெற்றதுமாயிருக்கிற ஜீவனுள்ள கல்லாகிய அவரிடத்தில் சேர்ந்தவர்களாகிய நீங்களும் என்று வசனம் நமக்கு கூறுகிறது

உலகம் முழுதும் விலையேறப்பெற்ற கல் என்று போற்றப்பட்ட நம்பிக்கையின் வைரம் அதை உடையவர்களுக்கு நம்பிக்கையை சிறிதேனும் தரவில்லை. மாறாக, ஜீவனுள்ள விலையேறப்பெற்ற கல்லாகிய கிறிஸ்துவினிடத்தில் வருகிற ஒருவரும் தங்கள் ஜீவைன இழக்க மாட்டார்கள். அவர்களுக்கு ஜீவனைத் தரவே அவர் இந்த உலகத்திற்கு வந்தார். அவரைப் பற்றி கொண்ட நாமும், நாம் இருக்கும் இடங்களில் ஜீவனுள்ள விலையேறப்பெற்ற கல்லாகவே விளங்கவேண்டும். 

விலையேறப்பெற்ற கல்லாகிய கிறிஸ்துவை விசுவாசிக்கிற உங்களுக்கு அது விலையேறப்பெற்றது; கீழ்ப்படியாமலிருக்கிறவர்களுக்கோ வீட்டைக் கட்டுகிறவர்களால் தள்ளப்பட்ட பிரதான மூலைக்கல்லாகிய அந்தக் கல்
இடறுதற்கேதுவான கல்லும் விழுதற்கேதுவான கன்மலையுமாயிற்று' (வசனம் 7). 

நமக்கு விலையேறப்பெற்றதாயிருக்கிற அந்த கல்தானே, விசுவாசியாதவர்களுக்கு இடறுதற்கேதுவான கல்லும் விழுதற்கேதுவான கன்மைலயுமாயிற்று. ஆகவே விலையேறப்பெற்ற கல்லாகிய கிறிஸ்துவும், அவரை விசுவாசிக்கிற நாமும் அவரில் ஆவிக்கேற்ற மாளிகையாகவும், இயேசு கிறிஸ்து மூலமாய்த் தேவனுக்குப் பிரியமான ஆவிக்கேற்ற பலிகளைச் செலுத்தும்படிக்குப் பரிசுத்தஆசாரியக்கூட்டமாகவும்
கட்டப்பட்டுவருகிறோமா என்பதைச் சிந்திப்போம். கர்த்தர் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக.