நாம் செல்கின்ற திருச்சபைக்காக நாம் ஊழியம் செய்யதான் வேண்டும்.
ஆனால் அதற்காக தேவனை விற்று நமது திருச்சபையை கட்டியெழுப்ப முடியாது!!!
எனது உள்ளுர் திருச்சபை ஒரு பெரிய சபையாக மாற வேண்டும். ஒரு பெரிய நிறுவனமாக மாறவேண்டும் என்ற ஆசையை விட தேவன் எமக்கு தந்திருக்கும் சக விசுவாசிகளை சரியான சத்தியத்தின்மேல் கட்டியெழுப்ப வேண்டுமென்ற வாஞ்சை எம்மிடம் இருக்க வேண்டும்.
அது என்னிடம் உண்டா? (தேவன் எதை எதிர்பார்க்கிறார்?) - சிந்திப்போம்....!!!
தேவனுடைய ராஜ்யத்திற்குரியவைகளை சிந்திப்போம்....
நமக்கு சொந்தமான இவ்வுலக திருச்சபையை நேசிப்பதைக் காட்டிலும் தேவனை அதிகமாக நேசிப்போம்!
மெய்யான உலகலாவிய திருச்சபை இயேசு கிறிஸ்துவின் மணவாட்டி சபையாகும் !!!
எனது திருச்சபையா? தேவனுடைய ராஜ்யமா?
இயேசு கிறிஸ்து எதை எமக்கு தர விரும்புகின்றார் என்பதை சிந்திப்பீர்.
செயல்படுவீர்.
No comments:
Post a Comment